வெள்ளி, 16 ஜனவரி, 2009

பொங்கல் திருநாள் யாருடையது?



தமிழர் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் பிரதானமானது தைப்பொங்கல் . தமிழர் மற்றும் இன்றி மற்ற இந்தியர்கலளும் இப்பண்டிகயை இந்தியா முழுவதும் வெவ்வேரு பெயர்களில் மிக விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். பொங்கலை சொந்தம் கொண்டாடும் பல இந்திய வம்சத்தினரும் இருக்கவே செய்கிறார்கள். தென் இந்தியாவில் இப்பொங்கல் விழா மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது; தைப்பொங்கல் , மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல்.
வட இந்தியாவில் மகரசங்கராந்தி என்று இப் பொங்கல் விழாவை அழைகிறார்கள். பஞ்ஜாப்பில் லொஹரி பண்டிகை , பொங்கலுக்கு ஒரு நாள் முன்பு அதாவது போகி பண்டிகயை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. சக்கரைப் பொங்கல் போல ஒரு வகையான உணவு செய்து இத்திருநாளை கொண்டாடுகிறார்கள். பஞ்ஜாபில் பாலுக்கு பதிலாக கரும்பு சாற்றில் அரிசி இட்டு , வெந்ததும் நெய், முந்திரி, ஏலக்காய் அகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது.
சங்க காலத்தில் தமிழர்கள் இந்திர விழாவாகிய போகி பண்டிகயை மிக விமரிசையாக கொண்டாடியதாக சிலப்பதிகாரத்தில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மாதவியை விட்டு கோவலன் பிரிந்த சம்பவம் இந்நாளில்தான் நிகழ்ந்தது. இவ்விழா வருண தேவனுக்கு நன்றி கூறும் விழாவாகும். இக்காலத்தில் இப்பண்டிகை மலைவாசிகள் மட்டுமே கொண்டாடி வருகிறார்கள்.
இப் பண்டிகை எங்களுடையது எங்களுடையது என்று கூறுவதிற்கு முன்பாக, சரிதிரத்தையும் , காப்பியங்களையும் ஒரு முறை புரட்டுங்கள். விடை தெரியும்.

2 கருத்துகள்:

தேவன் மாயம் சொன்னது…

பொஙகல் பற்றி நிறைய
புதிய
கருத்துகள்!!!
தேவா...

பெயரில்லா சொன்னது…

vanakam ,
mr.thevanmayam
thank you for your comments on my article.