வெள்ளி, 16 ஜனவரி, 2009

பொங்கல் திருநாள் யாருடையது?



தமிழர் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் பிரதானமானது தைப்பொங்கல் . தமிழர் மற்றும் இன்றி மற்ற இந்தியர்கலளும் இப்பண்டிகயை இந்தியா முழுவதும் வெவ்வேரு பெயர்களில் மிக விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். பொங்கலை சொந்தம் கொண்டாடும் பல இந்திய வம்சத்தினரும் இருக்கவே செய்கிறார்கள். தென் இந்தியாவில் இப்பொங்கல் விழா மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது; தைப்பொங்கல் , மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல்.
வட இந்தியாவில் மகரசங்கராந்தி என்று இப் பொங்கல் விழாவை அழைகிறார்கள். பஞ்ஜாப்பில் லொஹரி பண்டிகை , பொங்கலுக்கு ஒரு நாள் முன்பு அதாவது போகி பண்டிகயை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. சக்கரைப் பொங்கல் போல ஒரு வகையான உணவு செய்து இத்திருநாளை கொண்டாடுகிறார்கள். பஞ்ஜாபில் பாலுக்கு பதிலாக கரும்பு சாற்றில் அரிசி இட்டு , வெந்ததும் நெய், முந்திரி, ஏலக்காய் அகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது.
சங்க காலத்தில் தமிழர்கள் இந்திர விழாவாகிய போகி பண்டிகயை மிக விமரிசையாக கொண்டாடியதாக சிலப்பதிகாரத்தில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மாதவியை விட்டு கோவலன் பிரிந்த சம்பவம் இந்நாளில்தான் நிகழ்ந்தது. இவ்விழா வருண தேவனுக்கு நன்றி கூறும் விழாவாகும். இக்காலத்தில் இப்பண்டிகை மலைவாசிகள் மட்டுமே கொண்டாடி வருகிறார்கள்.
இப் பண்டிகை எங்களுடையது எங்களுடையது என்று கூறுவதிற்கு முன்பாக, சரிதிரத்தையும் , காப்பியங்களையும் ஒரு முறை புரட்டுங்கள். விடை தெரியும்.

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

பெண்ணியம் பேசும் பேயிணம்

ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் இறைவன் படைத்தான் என்று சான்றோர்கள் கூறுவார்கள். பெண்ணியத்தைப் புகழ்ந்து பேசும் எல்லா ஆண்களும் பெண்களை உயர்வாக நினைப்பதில்லை, மாறாக பெண்களை வெறும் வாரிசு பெரிக்கிகலாகதான் நினைகிறார்கள். தேவைப்படும் பொழுது மட்டும் பெண்ணிடம் காரியத்தைச் சாதிக்கும் ஈன ஆண் வர்கமும் இன்று வரையில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆண் என்பவன் பெண்ணினத்தைப் பேணி காக்கும் கடமையை இயற்கையாகவே பெற்றிருப்பான் இந்தியனாக ஜனித்திருத்தால். சிறு வயதில் தந்தையின் அரவணைப்பில், பூப்படைந்ததும் சகோதரன் கண்காணிப்பில், மணந்ததும் கணவனின் கட்டளைக்கு இணங்க அவளின் ஆசா பாசங்களைத் தாரைவார்க்கிறார்கள். கைம்பெண் ஆனதும் ஆண் பிள்ளையிடம் தஞ்சம் புகுந்து இறைவனின் எல்லையைக் காணும் நாட்களை எண்ணி கொண்டிருப்பார்கள். இக்கூற்றை விட வேறு என்ன வேண்டும் ஆணின் கடமையைப் பறைச்சாற்ற. கடமை என்னும் ஆதிகாரத்தில்தான் ஆண்கள் நடை போடுகிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
சில ஆண்கள், பெண்கள் தன்னுடைய அனைத்து ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று எண்ணம் வளர்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பெண்களை மிக துச்சமாக நினைக்கும் ஆண்களும் ஜீவித்துகொண்டுதான் இருக்கிறார்கள். எதுவரை செல்லும் இந்த பேய்களின் ஆதிக்கம்?