வியாழன், 27 ஆகஸ்ட், 2009

உன் நிறம் அறிந்தேன்...

நாகத்தின் படத்தின் அழகைக் கண்டு, மயங்கினேன். கம்பீர நடை, சான்று ஒட்டி பேசும் தோரனை, குரலில் ஒருவித மறைமுகக் கொஞ்சல் அனைத்தும் உன் அரிதாரம் தானா?
இனிக்க இனிக்க பேசிய உன் உதடு தீப் பொரியை வாரி இரைக்கும் சூளை என்று நிருபனம் செய்துவிட்டாய்.
பிற ஆண்கள் போல நீ கீழ்த்தனமாக இருந்து கொண்டு, எம் வர்க்கத்தையே தூத்துவது ஏனடா? குறைக் கொண்ட நீ சிறிதளவும் ஒப்புக்கொள்ளாமல் எம்மை மட்டும் சாடுவது சரியா? பக்குவம் அடையாத உன் மனதைக் ,கருங்கல் போல பீடிகை போடுவது உன் விவேகமா? பலவினமா?