திங்கள், 2 மார்ச், 2009

மனதை வருடும் ஏகாந்த வேலை

பலநாள் ஆசை என்னை புதுப்பிக்க தொடங்கின, எமது விரல்கள் மெட்டை தழுவ இசை எமது நினைவுகளை துயில் எழுப்பியது. எத்தனை நாட்கள் தான் மூடிப்பபோட்டு வைக்க முடியும் பாரமான நினைவுகளை? பசு அவசர அவசரமாக புல்லை தின்றுவிட்டு , பின் ஒரு இடதில் அமர்ந்து அசை போடுவதை போல நான் எமது இதயத்தை பாரமாய் செய்த சில விஷயங்களை அசை போடும் தவதருணம் இது. ஏகாந்தமான என் வாழ்கையில் இந்த ஏகதந்திதான் என் தோழமை தாகத்தை திர்த்து வருகிறது . தனிமையில் சுகம் காணும் ஒரு ஜீவனாயிற்றேன் .
பாமர மக்களில் இருந்து பட்டயம் வாங்கியவர் வரை அறியாமை எனும் மடமயில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். இறைத்தன்மை எனும் ஆழமான அறிவை உணர மடமையான செயல்களில் சிக்கித் தவிக்கிறார்கள். தவறான குருமார்களை அறியாமயினால் தேர்வு செய்து , ஆஹா ஒஹோ என புகழ்வார்கள் தமது குரு மார்களை. இல்லாத , கண்களுக்கு தென்படாத உண்மையைத் தேடி செல்வதே இறைப்பயணம். தன்னுள்ளே கடவுள் இருக்கும் பச்சத்தில் எங்கெங்கோ தேடி அலைகிறார்கள் அற்ப மானிடர்கள்.
சிலர் பேசும் பேச்சை கேட்டால் வேடிக்கையாக இருக்கும். ஒரு அழகிய காலை பொழுது , பள்ளி மின் மணி ரீங்காரத்தை எழுப்பியது. அனைவரும் விருவிருவென சிற்றுண்டி சாலையை நோக்கி விரைந்தனர். நானோ எமது நண்பன் கோபிவுடன் மகிலம்பூ மரத்தடிக்கு சென்றோம் வீட்டில் அம்மா கொடுத்த அனுப்பிய உணவை உற்கொண்டோம் . எப்பொழும் போல என்னை பாட சொல்லும் கோபி அன்றும் அவ்வாரே செய்தான். அத்தருணம் அவிழ்த்து விட்ட காயைப்போல திபுதிபுவென ஒடிவந்து பலகை இருக்கையின் மேல் அமர்ந்தன. வாணர கூட்டமே வந்து கூத்தாடுவதை போல அமைந்தது அக்காட்சி..
அக்கும்பலில் ஒருவன் தெய்வ வம்சதை நினைத்தவன் போல பேச்சை எழுப்பினான். கூறும் அனைத்து உறவுமுறைகளுமே தவறு .எடுத்து காட்டாக கண்ணனின் அக்காள் காட்டேரியாகவும், முருகனின் நண்பன் ஏசுநாதர் அன்றும் பெருமையுடன் மார்த்தட்டி சொல்லி கொண்டிருந்தான். இதை ஆவலுடன் கேட்டறிய ஒரு கோஷ்டி. இக்கூற்றை திருத்தச் சொல்லி என்னை கோபி ஜாடை காட்டினான். நான் அவனை கண்டு நகைத்து மௌனம் காத்தேன். தெய்வங்களுக்கு உறவு முறைகளே இல்லை, அனைத்தும் மானிட அறிவுக்கு ஏற்றவாறு அமைத்து கொண்டவைதான்.