ஞாயிறு, 11 ஜனவரி, 2009

பெண்ணியம் பேசும் பேயிணம்

ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் இறைவன் படைத்தான் என்று சான்றோர்கள் கூறுவார்கள். பெண்ணியத்தைப் புகழ்ந்து பேசும் எல்லா ஆண்களும் பெண்களை உயர்வாக நினைப்பதில்லை, மாறாக பெண்களை வெறும் வாரிசு பெரிக்கிகலாகதான் நினைகிறார்கள். தேவைப்படும் பொழுது மட்டும் பெண்ணிடம் காரியத்தைச் சாதிக்கும் ஈன ஆண் வர்கமும் இன்று வரையில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆண் என்பவன் பெண்ணினத்தைப் பேணி காக்கும் கடமையை இயற்கையாகவே பெற்றிருப்பான் இந்தியனாக ஜனித்திருத்தால். சிறு வயதில் தந்தையின் அரவணைப்பில், பூப்படைந்ததும் சகோதரன் கண்காணிப்பில், மணந்ததும் கணவனின் கட்டளைக்கு இணங்க அவளின் ஆசா பாசங்களைத் தாரைவார்க்கிறார்கள். கைம்பெண் ஆனதும் ஆண் பிள்ளையிடம் தஞ்சம் புகுந்து இறைவனின் எல்லையைக் காணும் நாட்களை எண்ணி கொண்டிருப்பார்கள். இக்கூற்றை விட வேறு என்ன வேண்டும் ஆணின் கடமையைப் பறைச்சாற்ற. கடமை என்னும் ஆதிகாரத்தில்தான் ஆண்கள் நடை போடுகிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
சில ஆண்கள், பெண்கள் தன்னுடைய அனைத்து ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று எண்ணம் வளர்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பெண்களை மிக துச்சமாக நினைக்கும் ஆண்களும் ஜீவித்துகொண்டுதான் இருக்கிறார்கள். எதுவரை செல்லும் இந்த பேய்களின் ஆதிக்கம்?

4 கருத்துகள்:

மு.வேலன் சொன்னது…

தம்பி, அருமையான எழுத்து; வாழ்த்துக்கள்!

பொதுவாக இப்படி ஆண் வர்கத்தையே சாடுவதைவிட அவர்கள் செய்யும் தவறுகளை குறிப்பிட்டு தெளிவு படுத்திருக்கலாம்.

பல சமயங்களில் பெண்களும் ஆண் ஆதிக்கத்தை (male chauvinism) கையாளுகிறார்களே!

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
நல்ல பதிவு. இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். மு.வேலன் அவர்கள் பெண்ணாதிக்கத்தால் மிகவும் பாதிப்புற்றிருக்கிறார் போல.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\பெண்கள் தன்னுடைய அனைத்து ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று எண்ணம் வளர்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பெண்களை மிக துச்சமாக நினைக்கும் ஆண்களும் ஜீவித்துகொண்டுதான் இருக்கிறார்கள்\\

வருத்தமானது

ஆனாலும்

உண்மையே ...

பெயரில்லா சொன்னது…

Mannikavum.
Ennal uyirukum melane enathu tamil eluthukalil enathu eluthukalai veliyida mudiyavillai.
Aan vargam munthaye kalatil irunthe immathiriyana tavarugalai seithu varugindrathu enbatil iyamillai.
Aanal aan vargam 100% sadaa mudiyathu.
Sila Penn vargamum avargaluku idagaa anaithu eena velaigalum seigirargal. Verum aangalai mattume sadiye ungal karuthu sirithu oonam kondullathu endru naan ninaikiren.

Endrum,
Prabu